வீதியோரமாக சென்ற சிறுவர்கள் மீது மோதிய லொறி: நேர்ந்த துயரம்!
சிலாபம்-குருணாகல் பிரதான வீதியின் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (01.02.2026) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரும் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடையவர் எனவும், விபத்தில் காயமடைந்த மற்றைய சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பிங்கிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்