சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு
கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை (Ampara) - சம்மாந்துறை (Sammanthurai) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை கட்டட வேலைக்காக மண்ணை பயன்படுத்தும் போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் மேலும் தெரிய வருகையில், கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டவர்கள் கட்டட வேளைக்காக மணல் எடுக்கும் போது இந்த கைக்குண்டை கண்டுள்ளனர்.
இதையடுத்து 119 எனும் காவல்துறை அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை காவல்துறையினர் கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுரவின் அரசியல் ஆட்டத்தில் குறுக்கிடும் சர்வதேச நாடுகள் : மீண்டும் அடிவாங்குமா இலங்கை பெருளாதாரம் !
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |