கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து!

International Monetary Fund Sri Lanka Harsha de Silva Economy of Sri Lanka
By Beulah Dec 05, 2023 01:41 AM GMT
Report

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம்(4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் : சாதாரண தர பரீட்சையில் படைத்த சாதனை!

ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் : சாதாரண தர பரீட்சையில் படைத்த சாதனை!

உற்பத்திப் பொருளாதாரம்

“இலங்கையில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தின் ஊடாக உலகச் சந்தையைக் கடக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற அடிப்படைக் கருத்தோட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது.

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து! | Harsha Calls Political Truce Debt Restructuring

நாட்டிற்கு கட்டமைப்பு ரீதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. கடன் மறுசீரமைப்பு இல்லாமல் நாடு முன்னேற முடியாது. நாடு குறித்து சிந்திப்பதாக இருந்தால் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பணவு தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. கடன் தவணை கிடைக்கும் என நம்புகிறோம்.

ஆனால் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பரிஸ் கிளப் மற்றும் இந்தியா கடனை மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது.

சீனாவிற்கு வழங்கப்பட வேண்டிய 5.8 மில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இணக்கம் கண்டுள்ளது.

ஆனால் ஏனைய கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இந்நாடு எங்களுக்கு முக்கியம்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் ராஜபக்ச குடும்பமும் அவர்களுடன் உள்ள குழுவினரும் நாட்டை வங்குரோத்தாக்கும் முடிவுகளை எடுத்துள்ளனர்.

 ஏற்றுமதி வருமானம் 

1994ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி கொள்கையை மாற்றியதால் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. இலங்கை வீழ்ந்த பள்ளத்தில் இருந்து மீள அரசாங்கம் சில உடன்பாடுகளுக்கு வர வேண்டும்.

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து! | Harsha Calls Political Truce Debt Restructuring

இந்த உடன்பாட்டுகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடையவை. 

நாட்டிற்கு கட்டமைப்பு ரீதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். சீனா மற்றும் இந்தியாவுடன் பேசி கடனை அடைத்துவிட்டு நகரும் நோக்குகளையே அவர்கள் உள்ளனர்.

உடன்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு இல்லாமல் நாடு முன்னேற முடியாது. நாட்டைப் பற்றி நாம் சிந்தித்தால், கடன் மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர வேண்டும்.

இந்தியாவின் பொருளாதாரம்

கலாநிதி மொன்டெக் சிங் அலுவாலியா சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். 1991 இல் இந்தியப் பொருளாதாரம் பூஜ்ஜியமாக வீழ்ந்தபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க பாடுபட்டவர்.

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து! | Harsha Calls Political Truce Debt Restructuring

அரசியல் காரணங்களால் அரசுகள் மாறினாலும்,இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட்டது.இதனால் இந்தியா வேகமாக அபிவிருத்தியடையும் நாடாக மாறியுள்ளது.

இறக்குமதி மாற்றீடு மூலம் இலங்கையின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது. நாட்டை உலகத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.உலக சந்தையில் உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

இதைச் செய்ய, பாரிய பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம், இதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரம் உலகச் சந்தையைக் கடக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த அடிப்படைக் கருத்து நோக்கின் அடிப்படையில் செயல்படுகிறது.

இலங்கையின் மிகக் கடுமையான பிரச்சினைகளில் ஒன்று சேமிப்பு இல்லாமையாகும்.குறைந்த சேமிப்பு என்பது முதலீடு செய்ய பணம் இல்லை என்பதை காட்டி நிற்கிறது. 

இலங்கையில் தொழில்முயற்சியாண்மைகள் உள்ளன. ஆனால், தொழில்முயற்சியாண்மைகளர்களுக்குத் தேவையான மூலதனம் இல்லை.

மூலதனத்தை பெற வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட வேண்டும். இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு,நிதிச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இந்த நம்பிக்கை ஏற்கனவே உடைந்து விட்டது.இதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது.

உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் உலகச் சந்தையைக் கடந்து,நாட்டின் சாதாரண பிரஜையும் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலையைச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர நாம் முயற்சிக்கிறோம்.

நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்பதற்கு சந்தையை எவ்வாறு ஒழுங்காக ஒழுங்குபடுத்துவது மற்றும் நியாயமான முறையில் வரிகளை விதிக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்.

சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்காகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட 'சக்தி அரசி வேலைத்திட்டம்' மூலம், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து ஞசு குறியீட்டை உருவாக்கி,இதன் மூலம் சந்தையை கைப்பற்ற முடிந்தது.தற்போதைய ஆட்சியாளர்கள் இதை தொடராது மாற்றியமைத்துள்ளனர்.”என்றார். 

வன்புணர்வு செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகளை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் : சஜித்

வன்புணர்வு செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகளை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் : சஜித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்    



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025