ரணிலின் கருத்துக்கு உடன்படுகிறேன்..! ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்
இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை உரையை ஆமோதிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தாம் உடன்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
மேலும், பொது வேலைத்திட்டத்தில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு குறிப்பாக சர்வகட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2/2: We must come together; specifically an all or multi party government for a limited period of time to work towards creating this new #SriLanka on a common minimum program. If so future generations would vindicate us.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 3, 2022