சுகாதார அமைச்சர் தற்போதைய நெருக்கடி குறித்து கவலைப்படவில்லை - முஜிபுர் ரகுமான்
Keheliya Rambukwella
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Mujibur Rahman
By Dhilak
சுகாதாரதுறையில் காணப்படும் நெருக்கடி குறித்து தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறிதும் கவலையில்லாமல் இருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் “மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை சுகாதாரத் துறையை பெரிதும் பாதித்துள்ள போதிலும், சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் அதனைத் தீர்ப்பதற்காக எந்த மேலதிக நடவடிக்கைகளும் எடுப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்