உயிர் பாதுகாப்பு மருந்து குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு
சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சிறி சந்திரகுப்த அமைச்சில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மருந்து இறக்குமதிக்காக ஏழாயிரத்து 300 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, எதிர்காலத்தில் உள்நாட்டு மருந்து விநியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த மருந்து விநியோகத்தில் 40 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும். தற்போது மருந்துத் தேவையில் 20 சதவீதமானவை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
உயிர் பாதுகாப்பு மருந்து
வைத்தியசாலைகளில் மின் கட்டண கொடுப்பனவு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பயன்படுத்தப்படும் உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் 14 மருந்துகள் உள்நாட்டில் காணப்படுகின்றன.
இம்மருந்துகளை அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
