பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில் : மூடப்பட்டன பாடசாலைகள்
பிலிப்பைன்சில்(philipines) வெயிலின் தாக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆபத்தான அளவை எட்டிய வெப்பக்குறியீடு
தலைநகர் மணிலா மற்றும் நாட்டின் இரண்டு பகுதிகளில் காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவீடான வெப்பக் குறியீடு "ஆபத்தான" அளவை எட்டும் என்று தேசிய வானிலை சேவை ஆலோசனை நிறுவனம் எச்சரித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிலிப்பைன்ஸின் பெரிய பகுதிகளில் வெப்ப அலை தாக்கியது, இதனால் கிட்டத்தட்ட தினசரி நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன, இதனால் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் மூடப்பட்டன
மார்ச் 3 ஆம் திகதி, பிலிப்பைன்ஸ் தலைநகரின் கிட்டத்தட்ட பாதிப் பகுதிகளில், வெப்பநிலை உயர்ந்ததால், பள்ளிகள் மூடப்பட்டன.
ஜனவரி மாதம், ஐ.நா.வின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப்,வெப்ப தாக்கத்தால் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் உட்பட 85 நாடுகளில் சுமார் 242 மில்லியன் மாணவர்களின் பள்ளிப்படிப்பை சீர்குலைத்ததாகவும், வெப்ப அலைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 15 மணி நேரம் முன்
