கிளிநொச்சியில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
கிளிநொச்சியில் (Kilinochchi) பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (27) சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையினாலே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்கு உள்ளானதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மேலும் பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாது பொது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













