வெள்ளத்தில் தென்னை மரம் உச்சியில் சிக்கி தவித்த நபர் - பதை பதைப்பு காணொளி
TN Weather
Weather
Floods In Sri Lanka
Flood
By Thulsi
அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சிக்கித் தவித்த நபர்கள் இலங்கை விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று (27) முதல் தென்னை மரத்தில் சிக்கிய ஒருவர் விமானப்படையால் மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இன்று (28) காலை பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டிய பாலத்தில் சிக்கித் தவித்த ஆறு பேரும் பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
விமானப்படையின் கூற்றுப்படி, பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஹிங்குராக்கொடவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தின் எண் 7 ஹெலிகாப்டர் படைப்பிரிவைச் சேர்ந்தது. மீட்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்