லெபனானில் ஹிஸ்புல்லா தளபதியை வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு
Israel
Lebanon
By Sumithiran
தெற்கு லெபனானில் தாம் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையின் தளபதி மற்றும் மேலும் இரண்டு உறுப்பினர்களை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
மஜ்தல் செலேம் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அபு கலீல் பர்ஜி மற்றும் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்பு மீது மேலும் பல தாக்குதல்
தெற்கு லெபனானின் பல பகுதிகளில், ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்பு என்று தாங்கள் விவரித்தவற்றின் மீது மேலும் பல தாக்குதல்களை நடத்தியதாகவும் இராணுவம் மேலும் கூறியுள்ளது.

இந்தக் கூற்றுகளை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.சமீபத்திய பதற்றம் தொடங்கியதிலிருந்து லெபனானில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி