மத்திய அதிவேக வீதி ஒன்றின் நிர்மாணப்பணிகள் திடீரென இடைநிறுத்தம்!
corona
sri lanka
people
By Shalini
கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரச்சன ரணதுங்க இந்த தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழையில் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலான மீளாய்வுகள் முன்னெடுக்கப்படும் வரை, வீதியின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்