ஈரானிய குழுவுக்கு வரலாற்று பாதுகாப்பு! ஏயார் போர்ஸ்-2 பரிஸில் இறக்கம்!
இஸ்லாமாபாத் பேச்சுக்கள் என்;ற ஒரு வரலாற்று அடையாளத்தின்;பின்னால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கிய வரலாறு தமது தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு உருவாக வேண்டும் என்ற ஒரு ஆவல் பாகிஸ்தானுக்குள்ள பின்னணியில் இன்று அமெரிக்க - ஈரானிய பேச்சுகள் ஆரம்பமாகின்றன.
இந்தப்பேச்சுக்களுக்காக நேற்று ஈரானிய குழு இஸ்லாமாபாத்துக்கு சென்ற நிலையில் இந்த தூதுக்குழுவிற்கு பாகிஸ்தானால் போர்க்கால வான் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இஸ்லாமாபாத் பறக்கும் வழியில் ஈரானிய தூதுக்குழுவை இஸ்ரேலிய விமானங்கள், அல்லது அதன் முகமைகள் குறிவைக்கலாம் என்ற அச்ச ஊகங்களால் இந்த அசாதாரண பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஒரு பேச்சுவார்த்தை குழுவைப் பாதுகாக்க, யுறுயுஊளு ரேடார்விமானம் தலைமையில் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதும் இதுவே முதன்முறையாகும்.
இதேபோல அமெரிக்க துணை அரசதலைவர் ஜே.டி.வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கதூதுக்குழு ஏயார் போர்ஸ்-2 இல் வோசிங்ரனில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு பரிஸில் இறங்கி ஏறி இஸ்லாமாபாத் பறந்தபோது அதற்கு அதன் சொந்தப்பாதுகாப்பு இருந்தது ஜேர்மனியில் உள்ள அமெரிக்க வான்படை தளத்தில் இருந்த போர்விமானங்களின் பாதுகாப்புடன் துருக்கி வான்வெளியூடாக பறந்த ஏயார் போர்ஸ்-2 இன்று முற்பகல் இஸ்லாமாபாத் நூர்கான் படைத்தளத்தில் இறங்கியது.
மத்திய கிழக்கின் சமாதானத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் பரபரப்பாக இருக்கவேண்டி இஸ்லாமாபாத் வீதிகள் ஒப்பீட்டளவில் அதிகம் வெறிச்சோடியிருந்தன.
இந்த பேச்சுவார்த்தைக்குரிய பாதுகாப்புக்காக நேற்றும் இன்றும் ஏறக்குறைய ஒரு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது போல இஸ்லாமாதபாத்வாசிகள் இருந்த நிலையில்இந்த பேச்சுகள் இடம்பெற்ற பின்னணியில் சவாலான இந்த பேச்சுகள் அதன் பின்னணியை தொட்டுவருகிறது செய்திவீச்சு ...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |