யாழில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு கௌரவிப்பு!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வர்த்தக பிரிவில் 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (17.10.2024) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
எதிர்காலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள ஏனைய மாணவர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வெற்றி கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பேராசிரியர் ரொபின்ஸன் (Robinson) கலந்துகொண்டதுடன், ஆசிரியர்களான எஸ்.பிரதீபன், ஆர்.தர்சன், திரு.திருக்குமாரன் ஆகியோரும், வழக்கறிஞர்களான சுரேக்கா, செல்வி. உஷாந்தினி ஆகியோரும், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் :- கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |