நாளை "றீச்சாவில்" புதிதாக திறக்கப்படும் முல்லை ஓய்வகம் மற்றும் தேவாலயம்!
Kilinochchi
Sri Lanka Tourism
Tourism
Reecha
By Pakirathan
பிரமாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை ஓய்வகம் (Hotel - Mullai) மற்றும் றீச்சா தேவாலயம் (reecha Church) என்பன நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
நாளைய தினம் (11 - ஏப்ரல் - 2023) காலை 11 மணியளவில் றீச்சா தேவாலயமும், மதியம் 12 மணியளவில் முல்லை ஓய்வகம் எனும் பெயரில் 35 அறைகளுடன் கூடிய விடுதியும் (hotel - mullai) திறந்து வைக்கப்படவுள்ளது.
முல்லை ஓய்வகத்தினை ராசையா ரஞ்சித் லியோன் (லண்டன்) அவர்கள் திறந்து வைக்கவுள்ளதுடன், றீச்சா தேவாலயத்தை அருட்தந்தை அன்புராசா, அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்