சிறையிலிருந்து கசிந்த பிரித்தானிய பெண்ணின் காணொளி: எப்படி வெளியாகியது தெரியுமா..!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Prisons in Sri Lanka
By Dilakshan May 31, 2025 11:41 AM GMT
Report

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண்ணின் காணொளி எவ்வாறு வெளியாகியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 12 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சார்லட் மே லீ என்ற 21 வயது பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்

பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்

காணொளி

தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இலங்கைக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த இளம் பெண்ணின் இரண்டு பயணப் பைகளில் 46 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த இளம் பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் சம்பந்தப்பட்ட இளம் பெண் நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறைந்த வசதிகளுடன் இருப்பதாக பிரித்தானிய டெய்லி மெயில் வலைத்தளம் 21 ஆம் திகதி காணொளியொன்றை வெளியிட்டிருந்தது.

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

வழக்கு விசாரணை

அதன்படி, இந்த வழக்கு விசாரணைகள் நேற்று நீர்கொழும்பு இல 02 மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, ​​சிறை அதிகாரிகள் அந்த இளம் பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

சிறையிலிருந்து கசிந்த பிரித்தானிய பெண்ணின் காணொளி: எப்படி வெளியாகியது தெரியுமா..! | How The Video Of The Foreign Woman Was Released

விசாரணை அதிகாரிகள் இளம் பெண்ணின் பயணப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட 46 கிலோ குஷ் போதைப்பொருளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், மேலும் அதை நீதிமன்றத்தின் வழக்கு கோப்பு அறையில் வைப்பதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பெண் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி சம்பத் பெரேரா, ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு சமீபத்தில் தங்கள் கட்சிக்காரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று, சம்பவத்தைப் காணொளியாக படம்பிடித்து உலகம் முழுவதும் ஒளிபரப்பியதாகக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தனது கட்சிக்காரருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனை முழுமையாக ஆராய்ந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதவானிடம் கோரினார்.

மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து!

மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து!

பொத்தான் வடிவில் கமரா

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த சிறைச்சாலை அதிகாரிகள், அந்த இளம் பெண்ணின் நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் வந்து அவருடன் பேச அனுமதி கோரியதால், வழக்கமான நடைமுறையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினர்.

சிறையிலிருந்து கசிந்த பிரித்தானிய பெண்ணின் காணொளி: எப்படி வெளியாகியது தெரியுமா..! | How The Video Of The Foreign Woman Was Released

அதன்போது, அங்கு வந்த ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, அந்த இளம் பெண்ணுடன் நடந்த உரையாடல்களைப் பதிவு செய்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரைப் பார்க்க சிறைச்சாலைக்கு வரும் பார்வையாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், மேலும் அவரைப் பார்க்க வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும், சந்தேகநபரான பிரித்தானிய பெண்ணை ஜூன் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.    

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025