மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Death
By Thulsi
கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) பரசன்கஸ்வெவ - மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
பரசன்கஸ்வெவ காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி