சிறிலங்காவில் மீண்டும் குடும்ப ஆட்சியா? களமிறங்கவுள்ளார் மற்றுமோர் வாரிசு!
Election
President
Daham Sirisena
By MKkamshan
அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன (Daham Sirisena) தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தஹாம் சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலநறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
தஹாம் சிறிசேனவை தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் அரச தலைவரின் மகள் சத்துரிகா சிறிசேனவும் கடந்த காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 14 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்