முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு

Tamils Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker Feb 16, 2024 07:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

முஸ்லிம்களுக்கு எதிராக தான் வெளியிட்ட கருத்துக்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்குமாறு நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திடம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் நேற்று(15) இவ்வாறு  தெரிவித்திருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் பாரிய மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் பாரிய மாற்றம்

இனவாத கருத்துக்கள்

பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்ததால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன.

tamil muslims

இந்நிலையில், இலங்கையில் மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் 8 வருடங்களின் பின்னர் அது பற்றி உணர்ந்து கொள்வதாகவும் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு

அதற்கு வழக்கின் சாட்சிய விசாரணையை முடித்துக் கொண்டு, வழக்கின் தீர்ப்பு மார்ச் 28-ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதி ஆதித்ய படபெந்திகே அறிவித்தார்.

muslims tamils srilankans

ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணிகளான ஐரேஸ் செனவிரத்ன மற்றும் சஞ்சய ஆரியதாச ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கின் இறுதி தீர்ப்பில் தேரருக்கு நீதிமன்றினால் கடும் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞானசார தேரர் மன்னிப்பு கோரியுள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

தமிழர் தாயகப்பகுதி

2009க்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளிலும் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தீவிரமான பௌத்தமயமாக்கள் செயற்பாடுகளுக்கு மூலகாரணமாக ஞானசார தேரர் இருந்தார்.

முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு | Iapologize To The Muslim Community Gnanasara Thera

மேலும், அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டமைக்காக காவல்துறையினரால் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025