ஹிஸ்புல்லா அமைப்பின் நிலத்தடி ட்ரோன் "விமானத் தளத்தை" கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்
தெற்கு லெபனானில், இஸ்ரேலிய எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குன்றின் மீதான கிராமத்திற்கு அடியில், ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு நிலத்தடி ட்ரோன் "விமானத் தளத்தை" கட்டியுள்ளது. அங்கிருந்து அது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தி வந்தது.
மிகப்பெரிய எஃகு வெடிப்புத் தடுப்புக் கதவுகளால் பாதுகாக்கப்படும் இந்த நிலத்தடி தளம், கடந்த பத்தாண்டுகளில் திட்டமிடல் மற்றும் நிதியுதவி உட்பட ஈரானின் நேரடி உதவியுடன் கட்டப்பட்டது என்று, கடந்த வாரம் அந்த இடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகப் பயணத்தின் போது இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் 'தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்' பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கடந்த காலங்களில் தெற்கு லெபனானில் இதேபோன்ற ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்துள்ளன, ஆனால் இது "மிக உயர்ந்த தரத்தில்" கட்டப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 2024-ல் இராணுவம் சோதனை நடத்திய சிரியாவில் உள்ள ஒரு நிலத்தடி ஈரானிய ஏவுகணைத் தொழிற்சாலைக்கு ஒப்பிடத்தக்கது என்றும் இஸ்ரேலிய தளபதிகள் கூறினர்.
images credit -times of israel
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



