நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்

Namal Rajapaksa Bribery Commission Sri Lanka Law and Order
By Jaso Sep 17, 2026 05:12 PM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கோட்டை நீதவான் பாசன் அமரசேன 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால்,நாளை 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை கிடைத்தாலும் விடுதலை பெறும் வாய்ப்பை அவர் இழப்பார் என தெரியவருகிறது.

சந்தேக நபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டபிணைமனு மீதான உத்தரவு நாளையதினம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

நான்காவது சந்தேக நபர்

இந்தச் சம்பவத்தில் நாமல் ராஜபக்ச 4வது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல் | If Namal Granted Bail 18Th He Cannot Be Released

ஏர்பஸ் நிறுவனத்தின் உள் மின்னஞ்சல்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கைகள், இந்தச் சம்பவத்துடன் நாமல் ராஜபக்சவின் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.

பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2 மில்லியன் அமெரிக்க டொலர் (1,454 மில்லியன் யூரோ) தொகை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

ஏர்பஸ் டீல் மின்னஞ்சலில் ஜனாதிபதியின் மகன் என்ற வாசகம்! சிக்கலில் நாமல்

ஏர்பஸ் டீல் மின்னஞ்சலில் ஜனாதிபதியின் மகன் என்ற வாசகம்! சிக்கலில் நாமல்

வெளிநாட்டில் உள்ள சந்தேக நபர்கள்

மேலும், அதன் ஒரு பகுதி முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்த ராஜபக்சவின் கணக்குகளில் பெறப்பட்டது. இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியும், மூன்றாவது சந்தேக நபரான ஷமிந்த ராஜபக்சவும் வெளிநாட்டில் உள்ளனர், அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.

நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல் | If Namal Granted Bail 18Th He Cannot Be Released

இவ்வழக்கின் முக்கிய சாட்சியான நிமல் பெரேரா, அழுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் டி சில்வா, தனது கட்சிக்காரர் இலங்கையில் ஒரு அரசியல்வாதி என்பதால், வெளிநாடு சென்று தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும், பிணைச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே 18ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக அவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.      

யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026