தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் நியமனம்
சிறிலங்காவின் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் காவல்துறை மா அதிபர் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார்
மூன்று வருடங்களுக்கு காவல்துறை மா அதிபர் உறுப்புரிமை வகிப்பார் என்று கூறப்படுகிறது, இதன்படி மூன்று வருடங்களுக்கான நியமனக் கடிதத்தினை இன்று (19) அமைச்சரிடமிருந்து காவல்துறை மா அதிபர் பெற்றுக்கொண்டார்.
விளையாட்டுத்துறையில் நிகழ்கின்ற ஊழல்களை தடுப்பதற்காக விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்றைய பதவியேற்பின் பின்னர் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்கள்
மேலும், லஞ்சம் ஊடாக விளையாட்டு ஊழலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.