நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம்: மனந்திறக்கும் மக்கள்!
நீதிபதி இளஞ்செழியனை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்குள் கொண்டு வரும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் வருகை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதன்படி, இளஞ்செழியன் அரசியலுக்கு வருவதென்பது மிகவும் வரவேற்க விடயம் என்றும், அவருக்கு கூடுதலான ஆதரவு கிடைக்கும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, கடந்த காலத்தில் அரசியலுக்கு வந்த நீதியரசர் போல் அல்லாமல் அவர்களிடத்திலிருந்து வித்தியாசமாக இவரின் செயற்பாடுகள் அமையுமானால் இன்னமும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என மக்கள் ஐபிசி தமிழுக்கு கூறினர்.
இந்த நிலையில், நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் வருகை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை எடுத்துக் காட்டுகிறது ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
