யாழில் சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை வைத்திருந்தவர் கைது!
யாழ். வேலணை அராலிச் சந்திப் பகுதியில் சட்டவிதோதமான முறையில் மாட்டு இறைச்சியை எடுத்துசென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து இறைச்சியானது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை வேலணை அராலிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
புங்குடுதீவு பகுதி
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.30 மணியளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரி என்ற போர்வையில் வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த குறித்த நபர் ஊர்காவற்றுறை போக்குவரத்து காவல்துறையினரின் விசேட நடவடிக்கை ஒன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து சோதனை முன்னெடுக்கப்பட வேளை கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீன் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட தலா ஒரு கிலோ நிறைகொண்ட 35 இறைச்சிப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்படதுடன் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் இன்று குறித்த நபர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |