தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : கடற்றொழில் அமைச்சர் நேரடி விஜயம்
கிளிநொச்சி (Kilinochi) மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (R.Chandrasekar) பார்வையிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் நேற்றைய தினம் (29-05-2025) சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
பெருமளவு சேதங்கள்
இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
கடற்றொழில் அமைச்சரின் இந்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் (K.Ilankumaran) கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



