3 கிலோ பெறுமதியான தங்க நகை கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 பேர் கைது
6 பேர் கைது
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகள்
சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 தொலைபேசிகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆறு சந்தேக நபர்களில், 45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நால்வரும், நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட 40 மற்றும் 41 வயதுடைய இரு பெண்களும் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
