அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதே தற்போதைய முதன்மை இலக்கு என்று துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தக் கடல் வழியின் மீதான கட்டுப்பாடே மிக முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்த
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடல் வழிப்பாதையானது சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களின் விநியோகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, ஹோர்முஸ் ஜலசந்தி முடிந்தவரை விரைவில் மீண்டும் திறக்கப்படுவது மிக மிக முக்கியமானது.

உலகளாவிய எண்ணெய் விநியோகம் எந்தவிதத் தடங்கலுமின்றிச் சீராக நடைபெறுவதையே துருக்கி ஆதரிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தத் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |