கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த கதி!
கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (16.08.2026) இடம்பெற்றுள்ளது.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு
காவல்துறையினர் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |