ஐ.எம்.எவ் இன் முதற்கட்ட உதவி தொகை தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், டிசம்பரில் பெறப்படும் முதல் நிதி உதவி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர் மட்ட உடன்படிக்கை
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள 3 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.
நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கை செய்து கொண்டது.
இதன்படி, நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டது.
இது நான்கு வருட வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

