சிறிலங்காவுக்கு 'ஐஎம்எப்' செய்தி - எதிர்பார்ப்புகள் பொய்த்தன...
சிறிலங்கா அரசாங்கத்துடன் இறுதியாக இடம்பெற்ற பேச்சுக்களில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கை தொகுப்புக்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எனினும் பொருளாதார மீட்பிற்கான கடனுதவியை பெறுவதற்கு கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவானது, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அரசாங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தது.
சிறிலங்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
The aim of the new IMF program is to restore economic stability and debt sustainability, while protecting the most vulnerable, safeguarding financial stability & stepping up reforms to address corruption vulnerabilities so that Sri Lanka 🇱🇰 can meet its full potential. pic.twitter.com/Cyg78owJLQ
— IMF (@IMFNews) June 30, 2022
இந்த அறிக்கையில் பாரிய பொருளாதார மற்றும் கட்டமைப்பு கொள்கை தொகுப்பை வரையறுப்பதில் சர்வதேச நாணய நிதி பணியாளர் குழு மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடுகளின் கீழ் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டும் பேச்சுக்கள் காணொளி காட்சி ஊடாக தொடரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுக் கடன் தாங்க முடியாதது என மதிப்பிடப்படுவதால் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலுக்கு இலங்கையின் கடனாளிகளிடமிருந்து போதுமான நிதி மறுசீரமைப்பு உத்தரவாதம் தேவைப்படும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
கடனாளிகளிடமிருந்து போதுமான நிதி மறுசீரமைப்பு உத்தரவாதம்
[ZO6UZQ[
கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.
ஏற்கனவே 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் உள்ள இறையாண்மைப் பத்திரம் வைத்திருக்கும் ஒருவர் முழுப் பணத்தையும் கோரி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.