பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் - வெளியானது வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
By Vanan
பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இறக்குமதி தடைக்கான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் ஆகியவை இதனுள் அடங்கும்.
இறக்குமதி தடை நீக்கம்
நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்ட சில பொருட்களின் இறக்குமதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் முன் அனுமதிக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 5 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்