கனடா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கனேடிய அரசின் அறிவிப்பு
கனடா செல்வோருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை நீடிக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தடுப்பூசி பெறாத பயணிகள் அதற்கான முறையான விதிவிலக்கு பெறாத நிலையில், கனடாவுக்குள் நுழைந்ததும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலையில், முதல் நாள் மற்றும் எட்டாவது நாள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுதல், யாராவது ஒருவரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தல் முதலான நடைமுறைகள் தொடர உள்ளன.
சுகாதாரதுறை அமைச்சர் வெளியிட்ட தகவல்
இது தொடர்பாக கனடா சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos தெரிவிக்கையில், கொரோனா காலகட்டம் இன்னமும் முடியவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.இந்த வைரஸிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நம்மால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யவேண்டும் என தெரிவித்தார்.
முன்புபோல இப்போதும் கனடாவுக்கு பயணிக்கும் அனைவரும், தாங்கள் பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் ArriveCan அப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி தங்கள் பயணம் குறித்த தகவலை வழங்கவேண்டும்.
அத்துடன், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் மையங்கள் விமான நிலையங்களுக்கு வெளியே அமைக்கப்படுகின்றன. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.