தமிழ் கட்சிகளின் புதிய சங்கமம்: அரசுக்குத் தொடர்பில்லை என அறிவிப்பு
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14-07-2026) நடைபெற்றது.
இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில் உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின் தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
புதிய கூட்டணிகள்
அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிரணிகளின் ஒன்றிணைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஆளுங்கட்சிக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என்னிடம் கேளுங்கள்.
எதிரணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும்.
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் எமக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது.
அவர்களுடன் நாம் எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம் எனவே புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு எமது அரசுக்குக் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |