பாரிசில், உணர்வுபூர்வமாக நடைபெற்ற "எழுக தமிழா" நிகழ்வு (படங்கள்)

Sri Lankan Tamils Paris
By Sumithiran Jun 23, 2022 10:11 PM GMT
Report

"எழுக தமிழா" எழுச்சி நிகழ்வு

இலங்கைஅரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ் வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr. Albertino Ramaël அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து எமது தேசியக்கொடிக்கீதம் காற்றலையில் ஒலிக்க, தமிழீழ தேசியக் கொடியினை திருமதி ஈழநதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

பட்டொளி வீசிப் பறந்த தேசியக்கொடியின் கீழ் மக்கள் பரவசமாய் நின்றிருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வின் விளக்கவுரையினை, இளையதலைமுறையின் ஏற்பாட்டாளர் குலராஜ் நிகழ்த்த,அதனைத்தொடர்ந்து மூத்த கலைஞர்களின் பறையிசைப்பாடல் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது.

சிறப்புரைகள்

பின்னர் உரைகள் இடம்பெற்றன. ville juif நகரசபை உறுப்பினர் Mr.Guillqme de souch, vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr.Albertino Ramaël, Bondy நகரசபை உதவி நகரபிதா திருமதி Katie, Seine saint Denis மாவட்டசபை உறுப்பினர் Oldhynn PIERRE, Bondy சபையின் உதவி நகர பிதா திருமதிCathy JANKOWSKI. Bondy மாநகர சபை உறுப்பினர் பிறேமி பிரபாகரன் போன்றோர் உரையாற்றியதுடன், பிரெஞ்சு மொழியிலான உரையினை, செல்வி. அம்மு ரஞ்சித்குமார், செல்வி.இலக்கியா எட்வேர்ட் லூயிஸ், ஆகியோரும், சிறப்புரைகளினை, தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன்.நாயகன், la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா ஸ்ரீகணேஸ், தமிழரசன், சுதன்ராஜ், Noisy le sec நகரசபை உறுப்பினர் El hadj Mahmoudba ஆகியோரும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் கவிஞர் வன்னியூர் குரூஸ் அவர்களின் உணர்வுக் கவிதையும், மூத்த கலைஞர்களான தயாநிதி, மயிலையூர் இந்திரன், ஆகியோரின் சிறந்த வெளிப்படுத்தலில் "நாயைக்காணவில்லை" எனும் நாடகமும் நடைபெற்றன. கூடிநின்ற மக்கள்,உணர்வாளர்களின் மனமுருக சிறப்பாக அமைந்திருந்தது அந்நாடகம்.

நமது தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டது திட்டமிடப்பட்ட இனவழிப்பு எனவும் ,அதற்கான நீதி கிடைக்க பிரான்ஸ் அரசாங்கம் எமக்கு உதவி புரிய வேண்டுமெனவும், மூதாதையர் வழிவந்த எமது தேசிய அடையாளங்களை அழியவிடாது பாதுகாத்து பயன்படுத்துவதற்கும் , போரில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நிலையையும் விடுதலையையும் பெற்றுத்தருவதற்கும் மனிதாபிமான பிரான்ஸ் அரசு தமக்குஉதவி புரியவேண்டுமெனவும் "எழுக தமிழா" நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து நன்றியுரையினை குணா அவர்கள் வழங்க தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு 'நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்' எனும் பாடலுடன் நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக நிறைவுபெற்றது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024