45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் - வரி தொடர்பில் வெளியான தகவல்
மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வரி அறவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் முதலில் தீர்மானித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வரம்பை ஒரு இலட்சமாக உயர்த்த முடிந்துள்ளதாக அவர் கூறினார்.
மக்கள் மீது வரிச் சுமை
“எதிர்கால கடனை அடைக்க, வருமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அரசு நிறுவனங்களும், சட்டபூர்வ அமைப்புகளும் இலாபம் ஈட்டினால், மக்கள் மீது இவ்வளவு வரிச் சுமையை நாம் சுமத்தத் தேவையில்லை.
இலாபம் இருந்தால் அது அரச வருவாயில் சேர்க்கப்படும். இதுபற்றி அரசியல் சாராத அறிவொளிப் பேச்சு நடத்துவது நல்லது. வரி வருவாயை நம்புவதை விட, வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது முக்கியம். அப்போது மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. ” என தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
