புத்தாண்டு காலத்தில் அதிகரிக்கும் விபத்துக்கள் - மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை
புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அண்மை காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக சுமார் 29 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவின் சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் அவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு காலங்களிலேயே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்துடன் ஒப்பிடுகையில் மற்ற மாகாணங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதாகவும் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் குறித்து விசேட கவனம்
வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவ சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துவது, தங்களை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |