மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை- மனித மோதல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கனள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு - மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் வியாழக்கிழமை(19.03.226) இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்குத் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர், இராணுவத்தினர் மாந்தீவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகளை களத்தில் நின்று காட்டு யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்புறப்படுத்தும் முயற்சி
இந்தக் காட்டுயானைகள் வவுணதீவு, ஆயித்தியமலை பிரதேசம் முழுவதும் உணவுதேடி சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது யானை மனித மோதலை தொடர்ந்து மாந்தீவு நிலப்பரப்பிற்குள் சஞ்சரித்த காட்டு யானை கூட்டத்தை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்த போதும் யானைக் கூட்டம் மாந்தீவு பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் முதல் நகர் பகுதி வரைக்கும் தற்போது காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மண்முனை தென் எருவில் பற்று
மேலும். மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மக்கள் குடியிருப்புக்குள்ள தீடீரென் இன்று வெள்ளிக்கிழமை(20.03.2026) காலை காட்டு யானை ஒன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது.

திடீரென அப்பகுதி மக்கள் குடியிருப்புக்குள் இந்த காட்டு யானை உட்ர்குந்துள்ளதை அவதானித்த பிரதேச வாசிகள், வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காட்டுயானையை அப்புறப்படுத்துவதற்கு உயிர் அச்சுறுத்துலுக்கும் மத்தியில் பல்வேறான பிரயத்தனங்களை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் அப்பகுதி இளைஞர்கள் காட்டு யானையை தொந்தரவு செய்ய முயற்சித்த அதன் விளைவாக அந்த யானை களுதாவளை தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், ஆகிய கிராமங்களை ஊடறுத்து குருக்கள்மடம் களப்புப் பகுதிக்குச் சென்று அப்பகுதியில் உள்ள பற்றைக்காட்டில சஞ்சரித்துள்ளது.

இதனிடையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோஸ்தர்கள், பொதுமக்களை கட்டுப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் பணியினை முன்னெடுக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |