20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகப் பணியில் ஈடுபட்டு வரும் வடிவேல் சக்திவேல், இத்துறையில் இருந்து கொண்டு மாவட்டம், மாகாணம், மற்றும் பிராந்திய ரீதியில் செய்திகளை எழுதிவருவதோடு, அரசியல், சுகாதாரம், சுற்றாடல், மற்றும் மக்கள் மத்தியில் காணப்படும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பிலும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் எழுதி வருகின்றார்.
அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியாகவும், இதழியல் மற்றும் மாஸ் மீடியா டிப்ளோமாதாரியாகவும் இருக்கின்றார்.
சமூகத்தின் மத்தியில் இலைமறை காயாக இருந்து வருவதும், மருவி வருகின்றன கலை, கலாசார விடையங்களையும் ஊடகத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தி அவறை அடுத்த சந்ததியினரின் பயன்பாட்டுக்கு எடுத்தியம்பி வருகிறார்.