மட்டக்களப்பில் கொடூரம் : தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் விவசாயி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் கொலை செயட்யபட்ட நிலையில் விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026)சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உறங்கிக்கொண்டிருந்த விவசாயியே சடலமாக மீட்பு
தனது தோட்டத்தில் சனிக்கிழமை வரையும் வேலை செய்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த விவசாயியே இவ்வாறு ஞாயிற்றுக் கிழமை இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்
தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
பின்னர் மட்டக்களப்பு உதவி காவல்துறை அத்தியட்சகர் திலிப்குமார, காவல்துறை தடயவில் பிரிவு, காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட காவல்துறை குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |