உலக கிண்ண கனவை இழந்தது இந்தியா..! விக்கட் இழப்பின்றி வெளுத்து வாங்கிய இங்கிலாந்து
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
உலக கிண்ண இறுதிப்போட்டி

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 170 ஓட்டங்களை பெற்று போட்டியில் அபாரவெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், வெற்றி பெற்ற இங்கிலாந்து எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.