யாழ் நல்லூரில் மக்கள் போராட்டம் - சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு
யாழில் (Jaffna) சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரி நாள் எனும் தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரெழுச்சி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் குறித்த போராட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டடானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |