அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு
அதானி(adani) இலங்கையில்(sri lanka) காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியாindia) இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு(colombo) பிளவர் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை
எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நிறுவனமான அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்தை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க அரசு தயாராகி வருகிறது என இது தொடர்பில் தெரிய வருகிறது.
இதேவேளை இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவிப்பு
இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)