சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம் - குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்!
சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக சிறிலங்காவில் ராடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ராடர் தளம் சிறிலங்காவின் மாத்தறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அடர் வனத்தில் சீனாவின் திட்டம்
இந்த ராடர் தளத்தை சீனா, சிறிலங்காவில் அமைப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும்.
வல்லரசுகளுக்கும் ஆபத்து
அதேவேளை, இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கும் குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும்.
இவ்வாறான நிலையிலேயே, கடந்த ஆண்டுகளில் சீனா 180 இற்கும் மேற்பட்ட விண்வெளி கருவிகளை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி கருவிகளை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
