இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம்

Sri Lankan Tamils S Vino Dr. S. Jaishankar Wimal Weerawansa India
By Sathangani Jun 21, 2024 10:36 AM GMT
Report

இலங்கைப் (Sri Lanka) பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினையில் இந்தியாவை (India) மீறி எந்தவொரு நாடும் தலையிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு இன்று (20) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) ஒரு நாள் விஜயமாக வருகை தந்துள்ளார். அவரது விஜயத்தை கண்டு இந்த நாடாளுமன்றத்திலுள்ள சிலர் அச்சப்படுகின்ற, சந்தேகப்படுகின்ற நிலைமையைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான அரச அதிகாரிகளின் சந்திப்பு! வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் எம்.பி

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான அரச அதிகாரிகளின் சந்திப்பு! வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் எம்.பி

ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

பொதுவாக இந்தியா என்று சொன்னால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அது “வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது“. அதுபோன்றுதான் இங்கே இருக்கின்ற சிலர் குறிப்பாக இனவாத பார்வை பார்க்கின்ற அரசியல் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு எதிராக கொக்கரிக்கத்தொடங்கி விட்டார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம் | India Can Intervene In Sri Lanka S Ethnic Problem

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கண்டு இவர்களுக்கு அச்சம், சந்தேகம் என்று சொன்னால் விரைவில் இலங்கை வரவிருக்கின்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) பார்த்து எந்தளவுக்கு அச்சம் கொள்ளப்போகின்றனர் என்பதை நாங்கள் சொல்லத்தேவையில்லை.

இந்தியா எமது அயல் நாடு, ஆபத்துக்கு உதவிய நாடு, தொடர்ந்தும் உதவிக்கொண்டு இருக்கின்ற நாடு, எந்த ஆபத்துக்கும் எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடிய நாடு. அவ்வாறான நாட்டின் பிரதிநிதிகள் இங்கு வருகின்றபோது எதற்காக இப்படி கூக்குரலிடுகின்றார்கள்.

அவர்கள் ஒரு நல்ல நோக்கத்துக்காக, இலங்கைக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு வருகின்ற வேளையில் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற இவர்களால்தான் சிங்கள மக்கள் கூட இந்தியாவை ஒரு எதிரி நாடாக பார்க்கின்ற சூழல் இருக்கின்றது.

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர்

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர்

இனவாத சிந்தனை

இந்த சபையில் கூட இன்று விமல் வீரவன்ச (Wimal Weerawansa), ஜெய்சங்கர் ஏன் வருகின்றார், அவரின் நோக்கம் என்ன, அவரின் பின்னால் மறைமுக கரங்கள் உள்ளனவா, என்று கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு இந்தியாவுக்கு எதிரான நிலைமை இருக்கின்றது.

இவ்வாறு இவர்கள் தவறாக சிங்கள மக்களை வழிநடத்துவதனால் தான் சிங்கள மக்களும் இந்தியாவை எதிரியாக பார்க்கின்றார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம் | India Can Intervene In Sri Lanka S Ethnic Problem

எங்களை பொறுத்தவரையில் இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையில் அல்லது அபிவிருத்தி, பொருளாதாரம் சார்ந்த விடயங்களில் முதலில் தலையிட முடியாது.

அவ்வாறு தலையிடுவதானால் அது இந்தியாவுக்கு பின்னர்தான், இந்தியாவுக்குத்தான் முதலிடம். இந்தியாவை மீறி இங்கு எதுவுமே அசையாது. இதுதான் உண்மை, யதார்த்தம். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்தியாவின் தலைவர்கள் வருகின்றபோது அதற்கு எதிராக கருத்துகள் கூறுவதனை, சந்தேகிப்பதை விமல் வீரவன்ச போன்ற இனவாத சிந்தனையுடையவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.

தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வு: ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து

தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வு: ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024