தமிழர் தாயகத்தை வேட்டையாடும் பௌத்த தேசம் - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Suresh Premachandran Sri Lanka India
By Kalaimathy Dec 15, 2022 02:55 PM GMT
Report

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு.ஜெய்சங்கர், அண்மையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மரபுரிமைகளை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கென்றே வெளிவிவகார அமைச்சில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பன்னிரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேஸ்வர ஆலயத்தை இந்தியப் பிரதமர் மோடி நேரில் சென்று வழிபட்டதன் பின்னர் அவ்வாலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆலய புனர்நிர்மாணம்

தமிழர் தாயகத்தை வேட்டையாடும் பௌத்த தேசம் - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! | India External Affairs Ministry Jaishankar Pm Modi

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உரையை வரவேற்றும் அவருக்கு நன்றி தெரிவித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடாபில் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பன்னிரண்டு ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர் நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சைவக் கோயில்கள் இடிப்பு

தமிழர் தாயகத்தை வேட்டையாடும் பௌத்த தேசம் - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! | India External Affairs Ministry Jaishankar Pm Modi

இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.

திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாறறுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

ஆலயங்களைப் பாதுகாக்கும் உரிமை

தமிழர் தாயகத்தை வேட்டையாடும் பௌத்த தேசம் - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! | India External Affairs Ministry Jaishankar Pm Modi

இன்று இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கும் சைவ மக்களுக்கும் உரித்தான மரபுரிமைகளை மறுதலித்து, அவற்றை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும்.

ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதிகாலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015