தீவைத்து எரிக்கப்பட்ட பெண் ஊழியர்- வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Tamil nadu Tamil Nadu Police India Crime Branch Criminal Investigation Department
By Kalaimathy Jun 04, 2022 07:32 AM GMT
Report

கோவை மாவட்டத்தில் பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண் 37 வயதுடையவர் என்றும் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இவர் கோவையில் உள்ள லைட்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உயிரிழந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய தொழில் அதிபரான நவநீதன் என்பவரின் லைட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

தொழிலதிபரான நவநீதனுக்கு  கோவையில் மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

தீவைத்து எரிக்கப்பட்ட பெண் ஊழியர்- வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! | India Murder Kovai Police Statement Court Death

அதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தொழிலதிபர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதன் போது,  கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் என அந்த பெண் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். 

மேலும் அப்பெண் தொடர்ந்து 6 முறை கருத்தரித்தாகவும், 6 முறையும் குறித்த தொழிலதிபர், மிரட்டியே தனது கருவை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தீவைத்து எரிக்கப்பட்ட பெண் ஊழியர்- வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! | India Murder Kovai Police Statement Court Death

அதன் போதே நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து தன் மீது தீவைத்து எரித்தனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் இந்த வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். அதனையடுத்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்து. இந்நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தேடிச் சென்ற போது 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர்.

அவர்களை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோர்ட்டில் நேற்று தொழில் அதிபர் நவநீதன் சரண் அடைந்தார்.

அவரை திருச்சி மத்திய நிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி சிறையில் நவநீதன் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறைியனர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். நவநீதனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவரை திருச்சி சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனு தாக்கல் நெய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மனு எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நவநீதனின் மனைவி எங்கு தலைமறைவாகி உள்ளார் எனவும் விசாரணை நடைபெறுகின்றது. அவரை கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  

உயிரிழந்த பெண் நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021