கனடா பொது தோ்தலில் தலையிடப்போகும் நாடுகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்பரல் மாதம் நடைபெறவுள்ள கனடா(canada) பொது தோ்தலில் இந்தியா(india) ரஷ்யா(russia), சீனா (china)மற்றும் பாகிஸ்தான்(pakistan) ஆகிய நாடுகள் தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின்பாதுகாப்பு உளவுப் பணிகள் துணை பணிப்பாளர் வனெஸ்ஸா லொய்ட் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.
இது தெடார்பில் அவா் மேலும் கூறுகையில், ‘கனடா தோ்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளது. புவிஅரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த செயலில் ஈடுபடும் திறன் மற்றும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது.
இந்தியா,சீனா ரஷ்யா நாடுகள் தலையிடும்
அதேபோல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோ்தல் பிரசாரத்தில் தலையிட்டு தனக்கு ஆதரவான நபா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக சீனா உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர ரஷ்யா மற்றும் பாகிஸ்தானும் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்த தோ்தலில் தலையிட முயற்சிகளை மேற்கொள்ளும் என்றாா்.
லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் பதவியிருந்து விலகினார். அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா்.
முன் கூட்டியே ஏப்ரலில் தேர்தல்
அதன்பின் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராக இம்மாத தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்றாா். இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு ஏப்ரல் 28-ஆம் திகதி தோ்தலை நடத்த அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
