வடக்கு - கிழக்கில் காலூன்ற தயாராகும் இந்தியா: தமிழர் பகுதிகளுக்கு ஏற்பட போகும் ஆபத்து
வடக்கு - கிழக்கில் இந்தியா
வடக்கு - கிழக்கில் இந்தியா பொருளாதாரத்தினை மையமாக பயன்படுத்தி காலூன்ற ஆரம்பித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தோ - பசுபிக் சமுத்திரத்தில் இன்று ஏற்பட்டுள்ள கேந்திர முக்கியத்துவம் தமிழர் பகுதிகளுக்கும், இந்தியாவிற்கும் சமமாக உள்ளது.
இந்தியாவிற்கான பெறுமதியும், கேந்திர தன்மையும்
இவற்றில் தமிழர் பகுதிக்கான பெறுமதி சிறியளவில் காணப்படுகின்றமையினால், இந்தியாவிற்கான பெறுமதியும், கேந்திர தன்மையும் அதிகரித்துள்ளது.
இந்த பெறுமதியை இந்தியா எவ்வாறு கையாளுகின்றது என்பது தான் பிரச்சினை.
இவை இந்தியாவில் உயரும் பட்சத்தில் இந்தியா வடக்கு கிழக்கில் காலூன்ற ஆரம்பிக்கும் என்பதே உண்மை.
பொருளாதார கட்டுமானங்களில் நுழையும் இந்தியா
அந்த வகையில், ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தின் மூலம் பொருளாதார கட்டுமானங்களில் இந்தியா நுழையும் போது இலங்கையின் பெறுமதி குறையும்.
இவை தமிழர் பகுதிகளுக்கு ஆபத்தாகவே அமையும். இது தொடர்பில் இந்தியாவுடன் பேச இலங்கையில், தகுந்த தமிழ் தலைவர்கள் இல்லை.
இதனை கருத்திற்கொண்டு இந்தியா பொருளாதாரத்தின் மூலம் வடக்கு - கிழக்கில் காலூண்ட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.