சீனாவை பின்னுக்குத் தள்ளி இலங்கைக்கு கடன்களை அள்ளிக்கொடுத்த இந்தியா! தற்போது வெளியான தகவல்
இலங்கைக்கு அதிகளவான கடனுதவியை வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்துள்ளது என தரவுகள் வெளியாகியுள்ளது.
அதிகளவான கடனுதவிகளை வழங்கிய நாடாக கருதப்படும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா, சீனா, அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா, போன்ற நாடுகள் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வழங்கியுள்ள கடனுதவிகள்
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் மீதான பல ஒப்பந்தங்கள் மூலமே கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட அகில இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.