தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் ஏவிய அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன, இடைமறிக்கப்பட்டன அல்லது அவை குறிவைத்த இலக்குகளை அடையத் தவறின என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களால் அமெரிக்கத் தரப்பில் எவருக்கும் காயங்களோ அல்லது அமெரிக்கத் தளங்களுக்கு எந்தப் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தெளிவாகச் சொல்வதானால், ஈரான் தன் முயற்சியில் தோல்வியடைந்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பதிலடி
அண்மையில் அமெரிக்கா ஈரானியத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்தது.

குறித்த மோதல் போக்கு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்