இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் : கடற்படை தளபதியின் பொய்யை அம்பலப்படுத்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள்
கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக வடமராட்சி கிழக்கு அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்படை தளபதியின் கருத்தை ஏற்கவில்லை
இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி கூறியுள்ளார். அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
